உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியின் உறவினர்களை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே: மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம்

Published On 2022-07-05 08:49 GMT   |   Update On 2022-07-05 08:49 GMT
  • கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம் என உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
  • பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சிஅருகே மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (36) மாற்றுத்திறனாளி. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எனது தங்கை மலர் கடந்த 27- ந் தேதி பெருமனம் கிராமத்திற்கு துக்கம் விசாரிக்க தனியார் மினிபேருந்தில் பயணம் சென்றார். அப்போது அவரை மணலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்.

எனது அக்கா மலருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதனால் எனது அக்கா மலர் இரவு முழுவதும் பெட்ரோல் பங்கிலேயே இருந்துள்ளார். அந்த மினி பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. மறுநாள் 28- ந் தேதி பெட்ரோல் பங்க் வேலையாட்கள் மூலம் எனது அக்கா மலர் அங்கு இருப்பது குறித்த தகவல் வந்தது. பின்னர்மலரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தொடர்ந்து புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது கடந்த 29- ந் தேதி இறந்துவிட்டார். எனது அக்கா மலர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அக்கா மலர் உடலை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News