உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே 800 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-11-14 12:18 IST   |   Update On 2022-11-14 12:18:00 IST
  • அமரகுந்தியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்த கேட்டிமன்னன் இங்கு பல கோவில்களை கட்டி கோட்டைகள் அமைத்து ஆட்சி செய்து வந்துள்ளார்.
  • இத்தகைய சிறப்புடைய கோவில் தற்போது இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள அமராவதி பட்டணம் என்று அழைக்க கூடிய அமரகுந்தியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்த கேட்டிமன்னன் இங்கு பல கோவில்களை கட்டி கோட்டைகள் அமைத்து ஆட்சி செய்து வந்துள்ளார்.கெட்டி மன்னன் காலையில் சொக்கநாதரையும், மதியம் கைலாசநாதரையும், மாலையில் வைகுந்த பெருமாளையும், அர்த்தஜாம பூஜையில் திருச்செங்கொடு அர்த்தனாரி ஈசனையும் வழிபட்டு வந்ததாக வரலாறு உண்டு,

இத்தகைய சிறப்புடைய கோவில் தற்போது இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிசேகம் நடை பெற்றது. இதையொட்டி கடந்த 11-ந்தேதி புனித தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது, அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடத்த பட்டு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபி ஷேகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை அதிகாரிகள் தக்கார் மற்றும் செயல் அலுவலர் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், அமரகுந்தியை சேர்ந்த சிவனடியார் திருகூட்டம் ஆகியோர் செய்தனர்.அதனை தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.

Tags:    

Similar News