உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது வழக்கு; தந்தை கைது

Published On 2023-10-27 08:56 GMT   |   Update On 2023-10-27 08:56 GMT
சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார்.

கடலூர்:

கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார். தொடர்ந்து தந்தை, மகன் என 2 பேரும் மூர்த்தியிடம் சென்று கேட்டனர்.அப்போது இவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மூர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீசன், ஜெயசீலன் ஆகியோர் மீதும், ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் மூர்த்தி மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயசீலன் போலீசாக பணிபுரிந்து வருவதும், தற்போது அவர் விடுமுறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News