உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே குடிபோதையில் பெண் மானபங்கம்
- சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே பில்லாலியை சேர்ந்தவர் சரளா (வயது 28). இவர் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சந்திரகிரி என்பவர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தட்டி கேட்க சென்ற அவர்களது உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரளா கொடுத்த புகாரின் பேரில் சந்திரகிரி மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.