உள்ளூர் செய்திகள்

ஏரியூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி சாவு

Published On 2023-07-22 15:16 IST   |   Update On 2023-07-22 15:16:00 IST
  • மகள் வீட்டில் இருந்து வீட்டிற்கு சென்றார்.
  • சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னான். இவரது மனைவி சின்னம்மா (வயது70). இவர்களுக்கு மாதப்பன் (50) என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சின்னம்மா நேற்று முன்தினம் இரவு சாம்பள்ளியில் இருக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது சோளப்பாடி வழியாக செல்லும்போது பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.

இதில் படுகாய மடைந்த சின்னம்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சின்னம்மா வின் மகன் மாதப்பன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News