உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் பல்வேறு வேடம் அணிந்து போஸ் கொடுத்த காட்சி

புஷ்பலதா பள்ளியில் நவராத்திரி விழா

Published On 2022-09-30 09:34 GMT   |   Update On 2022-09-30 09:34 GMT
  • பாளை புஷ்பலதா வித்தியா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
  • ஏற்பாடுகளை புஷ்பலதா கல்வி குழும தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

நெல்லை:

பாளை புஷ்பலதா வித்தியா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் துர்க்கை, சரஸ்வதி, லெட்சுமி, விநாயகர், மூம்மூர்த்திகள் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து பள்ளி வளாகத்தில் வைக்கபட்டிருந்த கொழுவின் அருகே காட்சிக்கொடுத்தனர். இதில் பள்ளிஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புஷ்பலதா கல்வி குழும தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News