உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்ற சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

செங்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்ற சட்டவிழிப்புணா்வு முகாம்

Published On 2023-02-11 09:30 GMT   |   Update On 2023-02-11 09:30 GMT
  • செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
  • வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

செங்கோட்டை:

செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காசோலை மற்றும் ஜீவனாம்சம் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.

வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும், நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, மூா்த்தி, சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

முகாமில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காசோலை மற்றும் ஜீவனாம்சம், பாகபிரிவினை வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்த்து வைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வக்கீல்கள் மாரியப்பன், சக்திவேல், வெங்கடேஷ், நித்யானந்தம், பழனிக்குமார், வீரபாண்டியன், சிவசுந்தரமூர்த்தி, இந்திரா, பாத்திமா கலிலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News