உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

திருக்குவளையில், தேசிய நெல் திருவிழா

Published On 2023-11-04 09:17 GMT   |   Update On 2023-11-04 09:17 GMT
  • பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
  • பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்:

திருக்குவளையில் தேசிய அளவிலான 17-வது நெல் திருவிழா நடைபெற்றது.

கிரியேட் நமது நெல்லை காப்போம் மற்றும் சேவாலயா ஏரொட்டி வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் நிறுவனம் இணைந்து நடத்திய நெல் திருவிழாவில் பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சீரக சம்பா, தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள் 100 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கிரியேட் -நமது நெல்லை காப்போம் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா, சேவாலயா தொண்டு நிறு வன தலைவர் முருகப்பெருமாள், திருக்குறளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், நமது நெல்லை காப்போம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News