உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். 

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தேசிய நிலா தினம்

Published On 2022-07-21 08:01 GMT   |   Update On 2022-07-21 08:01 GMT
  • மாணவி அஸ்மிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
  • “பூமிக்கு அருகாமையில் நிலா” என்ற தலைப்பில் அனுஷியா உரையாற்றினார்.

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தேசிய நிலா தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி அஸ்மிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முத்து ஜனனி, அனுபாமா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். லோகமித்ரா செய்தி வாசித்தார்.

வளர்பிறை குறித்து வர்ஷினி ஆங்கிலத்தில் உரையாற்றினார். "பூமிக்கு அருகாமையில் நிலா" என்ற தலைப்பில் அனுஷியா உரையாற்றினார். பிஸ்மி உறுதிமொழியெடுத்தார்.

பாரத் கல்விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் தேசிய நிலா தின விழாவில் கலந்து கொண்டவர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News