உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்ட காட்சி.

சிவகிரியில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேசிய கொடி

Published On 2022-08-14 08:54 GMT   |   Update On 2022-08-14 08:54 GMT
  • சிவகிரியில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது.
  • பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தேசிய கொடிகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிவகிரி:

சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிவகிரியில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்னேஷ் ராஜா, செந்தில்வேல், மருதவள்ளி முருகன் மற்றும் தலைமை எழுத்தர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News