உள்ளூர் செய்திகள்

திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-03-20 09:34 GMT   |   Update On 2023-03-20 09:34 GMT
  • மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
  • வரும் 27-ந் தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மறுக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து குழந்தை வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் குடும்ப சகிதமாக கரும்பில் தொட்டி கட்டி குழந்தையை படுக்க வைத்து கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலை அங்க பிரதட்சணம் செய்தனர்.

வரும் 27-ந் தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி ஊர் தர்மகத்தா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News