உள்ளூர் செய்திகள்

நன்னிலம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும்

Published On 2022-12-18 09:42 GMT   |   Update On 2022-12-18 09:42 GMT
  • மைதானத்தில் தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • மைதானத்தில் பயிற்சி பெற்ற பலர் ராணுவ பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்தில், பழமை வாய்ந்த கல்வி நிறுவனம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும்.

இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை கண்ட பள்ளி ஆகும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருக்கும் பொழுது, விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலேயே அரசு பள்ளிகளில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் தேசிய அளவிலான போட்டிகளில் நடத்தக்கூடிய வகையில், தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இரவு பகல் நேரங்களில் விளையாட்டுப் போட்டியில் நடத்தப்படக் கூடிய வகையில் மின்னொளி வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

மேலும் விளையாட்டு மைதானம் அனைத்து வகையான வசதிகளும் கொண்ட, விளையாட்டு வீரர்கள் சிறப்பான பயிற்சியை பெறக் கூடிய வகையில், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தரப்பட வேண்டும்.

நன்னிலம் பகுதியில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் இவ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று காவல்துறையிலும் ராணுவத்திலும் பணியில் சேர்ந்துபணியாற்றி வருகிறார்கள்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News