உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் 2200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

Published On 2022-10-31 13:51 IST   |   Update On 2022-10-31 13:51:00 IST
  • ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
  • அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் ராமாவரம் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 49), அண்ணா நகர் காலனியை சேர்ந்த தமிழ்செல்வன் (41) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் நாமக்கல், நல்லிபாளையம், ராமாவரம் புதூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வட மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News