உள்ளூர் செய்திகள்

பா.ம.கவினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பிளக்ஸ் பேனரை கிழித்ததாக பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்

Published On 2023-05-26 07:55 GMT   |   Update On 2023-05-26 07:55 GMT
  • குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது.
  • மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சென்றனர்.

நேற்று காலை பிளக்ஸ் பேனரை கிழிக்கப்பட்டி ருந்ததை பார்த்த பா.ம.க. வினர் 50-க்கும் மேற்பட் டோர் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பிளக்ஸ் பேனரை கிழித்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News