உள்ளூர் செய்திகள்

பால் வியாபாரி மீது தாக்குதல்

Published On 2023-08-30 09:53 GMT   |   Update On 2023-08-30 09:53 GMT
  • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி.
  • சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி. சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல தனது மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் கட்டையால் பாலுசாமியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலுசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுசாமியை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News