உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

Published On 2023-06-11 08:51 GMT   |   Update On 2023-06-11 08:51 GMT
  • பரமத்தி வேலூர் தாலுகா கீழ் சாத்தனூர் அருகே பெருமாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த னர். அவர் விற்ப னைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீழ் சாத்தனூர் அருகே பெருமாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில், கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 37) என்பவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த னர். அவர் விற்ப னைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News