உள்ளூர் செய்திகள்

கொல்லிமலையில் டாஸ்மாக் மது கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

Published On 2023-07-28 07:30 GMT   |   Update On 2023-07-28 07:30 GMT
  • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
  • இதையொட்டி டாஸ்மாக் மது கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விடுமுறை

இந்த நிலையில் விழா நடைபெறும் நாட்க ளான ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொல்லிமலை பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விட மாவட்ட கலெக்டர் உமா மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள செங்கரை, சோளக்காடு, செம்மேடு, காரவள்ளி, அடிவாரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு 1,2,3 தேதிகளில் விடுமுறை அளித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். 

Tags:    

Similar News