உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டிகளையொட்டி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றபோது எடுத்த படம். 

திருச்செங்கோட்டில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்

Published On 2023-08-26 07:05 GMT   |   Update On 2023-08-26 07:05 GMT
  • திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
  • வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1500, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 14, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் என்பது போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.

இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் உள்ள 32 பள்ளிகளை சேர்ந்த 1,258 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News