விஷம் குடித்த ரிக் வண்டி டிரைவர் சாவு
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (55). ரிக் வண்டி டிரைவர். இவர் சில வருடங்களா கவே உடல் நிலை பாதிக்கப் பட்டு பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி னார். பல்வேறு மருத்துவ மனை யில் சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியா காததால் விரக்தியில் இருந்த தங்கராசு நேற்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு உயிருக்கு போராடினார்.
அதைப் பார்த்த அவரது மனைவி பிரியா(48), கண வரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள் ளார். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரியா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.