உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டாரத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்திட மானியம்

Published On 2023-06-07 12:36 IST   |   Update On 2023-06-07 12:36:00 IST
  • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு,குறு விவசாயி சான்றி தல் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News