உள்ளூர் செய்திகள்

நாமக்கல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-11-14 09:20 GMT   |   Update On 2023-11-14 09:20 GMT
  • நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

நாமக்கல்:

நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தம பாளையம், கொண்டி செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொச வம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News