உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் வார சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வு

Published On 2023-06-12 07:38 GMT   |   Update On 2023-06-12 07:38 GMT
  • பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
  • இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப னைக்காக கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழி களை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர்.

இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனை யானது. ஆனால், நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கு விற்பனை யானது. விலை உயர்ந்ததால், நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News