உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி.

திருச்செங்கோடு அருகே துத்திப்பாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2023-10-30 07:51 GMT   |   Update On 2023-10-30 07:51 GMT
  • அரசு நடுநிலைப்பள்ளி இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது துத்திப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஓசூர், நாமக்கல், கோவை போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வரும் இவர்களை தனபால் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்து பள்ளிக்கு வரவழைத்தனர். இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆண்டுதோறும் இதேபோன்று ஒன்றிணைந்து பள்ளி வாழ்க்கையை நினைவு கூற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 27 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டதை போல தங்கள் ஆசிரியர்களுடன் மீண்டும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News