உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பால் வியாபாரி பரிதாப பலி

Published On 2023-05-29 08:04 GMT   |   Update On 2023-05-29 08:04 GMT
  • கடந்த 26-ந் தேதி காலை கபிலர்மலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
  • அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 62), பால் வியாபாரி.

இவர் கடந்த 26-ந் தேதி காலை கபிலர்மலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கபிலர்மலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று தலைமறைவான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News