உள்ளூர் செய்திகள்

மனைவியை கழுத்தை இறுக்கிக் கொன்றுலாரி டிரைவர் தற்கொலை செய்தது ஏன்?

Published On 2023-11-07 14:28 IST   |   Update On 2023-11-07 14:28:00 IST
  • செல்வராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு கார்த்திக் (26) என்ற மகனும் கார்த்திகா (25) என்ற மகளும் உள்ளனர்.
  • செல்வராஜ் திடீரென தனது மனைவி ராஜாமணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு கார்த்திக் (26) என்ற மகனும் கார்த்திகா (25) என்ற மகளும் உள்ளனர்.

மனைவி கொலை-கணவன் தற்கொலை

இந்த நிலையில் நேற்று செல்வராஜ் திடீரென தனது மனைவி ராஜாமணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் போது அவர்களது மகன், மகள் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது.

இது பற்றி அக்கம் பக்கத்தி னர் மங்களபுரம் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான தகவல்கள்

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து மனைவியை செல்வராஜ் எதற்காக கொலை செய்தார்? என விசாரணை நடத்தியதில் உருக்கமான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

கொலையுண்ட ராஜாமணியின் மகன் கார்த்திக் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜாமணியின் அண்ணன் தேவேந்திரன் என்பவரின் மகள் மகேஸ்வரிக்கும், கார்த்திக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ராஜாமணி முன்னின்று நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணத்தில் செல்வ ராஜுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் மனைவி ராஜாமணி யிடம் எனது மகனுக்கு ஏன் உன் அண்ணன் மகளை திருமணம் செய்து வைத்தாய்? என்று அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து செல்வராஜ் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் நேற்றும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செல்வராஜ் அவரது மனைவி ராஜாமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதில் கடும் கோபம் அடைந்த செல்வராஜ் மனைவி என்றும் பார்க்காமல் ராஜாமணியின் கழுத்தை சேலையால் இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.

சோகம்

தொடர்ந்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News