உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்வு

Published On 2023-07-05 07:25 GMT   |   Update On 2023-07-05 07:25 GMT
  • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.
  • வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.

வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூர் கரூர் பழைய பை-பாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் விற்பனையானது.

நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News