உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து மனுக்களை பெற்ற கலெக்டர் உமா.

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 286 மனுக்கள் பெறப்பட்டன

Published On 2023-05-30 07:24 GMT   |   Update On 2023-05-30 07:24 GMT
  • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
  • மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 286 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, தீ விபத்தால் வீடு இழந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், திடுமலை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு ரெட்கிராஸ் சார்பில், சமையல் பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை, கம்பளி, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.840 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோலும், ரூ.2,780 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News