சபரிநாதன் இலியாஸ் மாதேஸ்வரன்
போலீஸ் என கூறி ரூ.3.34 லட்சம் பறித்த3 பேர் சிறையில் அடைப்பு
- இ.பி. காலனி யைச் சேர்ந்தவர் செல்ல துரை (வயது 50). இவர் அங்குள்ள பொய்யேரி கரையில் டீக்கடை நடத்தி வருகிறார்.
- உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் இ.பி. காலனி யைச் சேர்ந்தவர் செல்ல துரை (வயது 50). இவர் அங்குள்ள பொய்யேரி கரையில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு சென்ற 3 பேர் சென்னை குற்றப் பிரிவு போலீசில் இருந்து வந்துள்ளோம். 3 ஆண்டுக்கு முன் அரசால் தடை செய் யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக உங்கள் மீது வழக்கு உள்ளது.
உங்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்தால் குண்டர் சட்டம் பாயும். உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.
மேலும் செல்லத்துரை வைத்திருந்த மொபைல் போனை பறித்து ரூ.3.25 லட்சம் வங்கியில் இருப் பதை தெரிந்து கொண்ட னர். தொடர்ந்து 3 காசோலை எடுத்துக் கொண்டு பரமத்தி சாலை யில் உள்ள தனியார் வங் கிக்கு அழைத்து சென்றனர்.
காசோலையை பயன் படுத்தி, செல்லதுரையை ரூ.3 லட்சம் எடுக்க வைத்து பறித்துக் கொண்டனர். ஒரு காசோலையில் ரூ.10 ஆயி ரம் எழுதி மிரட்டி கையெ ழுத்து போட்டு வாங்கி சென்றனர். இதுகுறித்து செல்லத்துரை யாரிடமும் புகார் கொடுக்கவில்லை.
இதனிடையே சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு வந்த செல்லதுரை மகள், தந்தை மொபைல் போனை பார்த்து வங்கியில் இருந்து ரூ. 3 லட்சம் எடுத்தது குறித்து கேட்டார். அப்போது 3 பேர் வந்து மிரட்டி பணத்தை பறித்து சென்றதை தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த செல்லதுரை மகள் வங்கியை தொடர்பு கொண்டு காசோலை யாரா வது கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட வங்கியின் காசோலை பயன்படுத்தி பணம் எடுக்க மர்ம நபர் வந்ததால் செல்லதுரைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் போலீசில் அவர் புகார் தெரிவித்தார்.
வங்கிக்கு சென்ற போலீசார், பணம் எடுக்க வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருச்செங்கோடு அடுத்த இலுப்புலியை சேர்ந்த மாதேஸ்வரன் (35) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவல்படி திருச்செங்கோட்டை சேர்ந்த சபரிநாதன் (35), சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த இலியாஸ் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சபரிநாதன் மீது கொலை வழக்கு, 3 கொள்ளை வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளன. இலியாஸ் மீது 2 கொலை வழக்கு, கொள்ளை வழக்குகள் நிறுவையில் உள்ளது. 3 பேரையும் கைது செய்து ரூ.1.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரித்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இதேபோல சபரிநாதன் உட்பட 3 பேரும் பல இடங்களில் கைவரிசை காட்டியதும், தற்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது.
அது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்பதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.