உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தென்னங்கன்றுகளை வழங்கிய காட்சி. 

பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

Published On 2023-07-15 09:22 GMT   |   Update On 2023-07-15 09:22 GMT
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
  • குடும்பங்களுக்கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

இந்த கிராமங்களில் குடும்ப அட்டை வைத்துள்ள, தென்னை மரம் இல்லாத அனைத்து குடும்பங்களுக் கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News