உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் ஆயில் நிறுவனத்தில்முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு

Published On 2023-08-15 09:54 GMT   |   Update On 2023-08-15 09:54 GMT
  • மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 மாவட்டங்களில் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது.
  • இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நாக்கல்:

மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய 5 கோட்டங்கள் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சேலம் கோட்டத்தின் கீழ் இயங்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.petrolpumpdealerchayan.in என்ற இணையதள முகவரியில் 27.09.2023 வரை விண்ணப்பித்து பயன்பெறலாம். விருப்பமும் தகுதியும் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு நாக்கல் கலெக்டர் உமா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News