அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ. 28.91 லட்சத்துக்கு ஏலம்
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 40.46 குவிண்டால் எடை கொண்ட 11 ஆயிரத்து 47தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.88-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.61-க்கும், சராசரி விலையாக ரூ.22.89-க்கும் என மொத்தம் ரூ. 88ஆயிரத்து 757-க்கும் விற்பனையானது. அதேபோல்375.02 குவிண்டால் எடை கொண்ட759மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.60-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.36-க்கும், சராசரி விலையாக ரூ.78.05-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.70-க்கும், சராசரி விலையாக ரூ.74.56-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 2 ஆயிரத்து 746-க்கு விற்பனையானது.