உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உதவி தொகை

Published On 2023-07-11 09:01 GMT   |   Update On 2023-07-11 09:01 GMT
  • பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம்.
  • ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதல்வரின், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம். அந்த வகையில், ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கலந்து கொள்ளலாம். முதிர்வுத்தொகை பெறுவதற்கு விண்ணப் பித்து பயனடையலாம். ரூ.1,500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் தொகை பத்திரம் அசல் மற்றும் நகல், 10-ம் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில்-தனி வங்கிக்கணக்கு), பாஸ் போர்்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார்.

Tags:    

Similar News