உள்ளூர் செய்திகள்

சிட்டுக்குருவி கூண்டுகள் பொருத்தும் பணி

நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி கூண்டுகள் பொருத்தம்

Published On 2022-06-12 09:58 GMT   |   Update On 2022-06-12 09:58 GMT
கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்:

நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி களுக்கான 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகூர் நகர்மன்ற உறுப்பினர் தியாகு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், நாகூர் சித்திக் , ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பைச் சார்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News