உள்ளூர் செய்திகள்
- புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
- தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நத்தபள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.