உள்ளூர் செய்திகள்
திட்டச்சேரி அருகே ராமசாமி பெருமாள் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த கொந்தகையில் ராமசாமி பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 2-ம் நாளான நேற்று மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் குத்துவிளக்கேற்றி ராமசாமி பெருமாள் வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.