உள்ளூர் செய்திகள்

மாயமான வாலிபர் ஆற்றங்கரையில் பிணமாக மீட்பு

Published On 2022-08-13 10:36 GMT   |   Update On 2022-08-13 10:36 GMT
  • குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
  • சூரக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் ஸ்ரீராம் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 28). இவர் விபத்தில் அடிபட்டு கால் இழந்த நிலையில் செயற்கை கால் உதவியுடன் நடந்து வந்தார்.

சம்பவத்ன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை தேடி வந்தனர். இந்த நிலையில் சூரக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் ஸ்ரீராம் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கால் இழந்த மன வேதனையில் ஸ்ரீராம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News