உள்ளூர் செய்திகள்

மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்

Published On 2023-08-27 15:24 IST   |   Update On 2023-08-27 15:24:00 IST
  • சாலை ஓரங்களில் மரங்க ளை நடவு செய்து கடந்த 15 வருடங்களாக பராமரித்து வந்தனர்.
  • மரங்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் வெட்டி சாய்த்து உள்ளனர்.

தொப்பூர்,  

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை தொம்பர காம்பட்டி பகுதியில் நெடு ஞ்சாலைத்துறை துறையினர் சாலை ஓரங்களில் மரங்க ளை நடவு செய்து கடந்த 15 வருடங்களாக பராமரித்து வந்தனர். இந்த மரங்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் வெட்டி சாய்த்து உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இது போன்ற மரங்கள் அழிப்பு தொடர்கதையாக மாறி வருகிறது.

இது போன்ற செயல் களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படாததே காரணம் என்று அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டி வைக்கின்றனர். மேலும் சாலை பரா மரிப்பு குழுவினர் ஆய்வு செய்து மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்துள்ளனர்.

Similar News