உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2022-12-03 15:33 IST   |   Update On 2022-12-03 15:33:00 IST
  • திருத்தணி அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
  • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கட்டிடம் மேஸ்திரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பெருகுமி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 40) கட்டிட தொழிலாளியான இவர் திருத்தணி பஜாரில் பழங்களை வாங்கிக்கொண்டு உடல்நலம் சரியில்லாத மாமனாரை பார்ப்பதற்காக ஞானமங்கலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருத்தணி அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கட்டிடம் மேஸ்திரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News