உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தாய்-மகன் திடீர்மாயம்

Published On 2022-10-10 08:25 GMT   |   Update On 2022-10-10 08:25 GMT
  • சுபா மற்றும் அவரது மகன் ஜீவா கணேஷ் ஆகியோர் கடைக்கு சென்று வருவதாக தனது தாய் கவுரியிடம் தெரிவித்துவிட்டு சென்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் செல்லங்குப்பம் சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபா (வயது 35). இவர்களது மகன் ஜீவகணேஷ் (வயது 12). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சுபா மற்றும் அவரது மகன் ஜீவா கணேஷ் ஆகியோர் கடைக்கு சென்று வருவதாக தனது தாய் கவுரியிடம் தெரிவித்துவிட்டு சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் இரண்டு பேரையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முது நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News