உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் 2 குழந்தைகளின் தாய் மாயம்: போலீசார் விசாரணை
- கடந்த ஜூலை 10-ந்தேதி காலை 8.00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை
- சரவணலட்சுமியின் தந்தை ரமேஷ், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. பெயிண்டர், இவரது மனைவி சரவணலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை 10-ந்தேதி காலை 8.00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணலட்சுமியின் தந்தை ரமேஷ், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சரவணலட்சுமியை தேடி வருகிறார்.