உள்ளூர் செய்திகள்

அமைச்சரின் உதவியாளர் பெயரில் பேஸ்புக் மூலமாக பணம் பறிப்பு

Published On 2023-01-10 07:02 GMT   |   Update On 2023-01-10 07:02 GMT
  • தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என பேஸ்புக் மூலமாக தெரி வித்துள்ளார்.
  • அந்த போலி சமூக வலைதள மூலமாக பணம் கேட்டால் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சிறுபான்மை துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் மருமகனும் அமைச்சரின் நேர்முக உதவி யாளருமான ரிஸ்வானின் பெயரில் போலி பேஸ்புக் மூலமாக திண்டிவனம் ,செஞ்சி, சென்னை, போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள நபர்களின் மூலமாக தொடர்பு கொண்டு தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என பேஸ்புக் மூலமாக தெரி வித்துள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் சைபர் கிரைம் போலீஸ் நிலை யத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அந்த போலி சமூக வலைதள மூலமாக பணம் கேட்டால் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News