உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு

Published On 2023-05-27 14:54 IST   |   Update On 2023-05-27 14:54:00 IST
  • கோதண்டராஜபுரத்தில், ரூ.23 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிட பணிகள், விற்குடி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டும் பணி, பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுரு கன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News