உள்ளூர் செய்திகள்

பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவன்- மாணவி.

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளி சாதனை

Published On 2022-06-23 08:52 GMT   |   Update On 2022-06-23 08:52 GMT
  • செல்வஹேம்ராஜ் 12-ம் வகுப்பு தேர்வில் 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்வு பெற்றார்.
  • 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சினேகா என்னும் மாணவி பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கல்வி சேவையில் 27ஆண்டுகளாக சிறந்து விளங்கி வரும் எம்.கே.வி.கே மெட்ரிக் பள்ளி மாணவர்களான செல்வஹேம்ராஜ்

12-ம் வகுப்பு தேர்வில் 600க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்வு பெற்றார். அதில் 3 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சினேகா என்னும் மாணவி 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். இவர் இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 500க்கு மேல் 28 மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 34 மாணவர்களும் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 மற்றும்

பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாலமுருகன் பாராட்டினார். முதல் இடங்களை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News