உள்ளூர் செய்திகள்

புவனகிரியில் குழந்தையுடன் பெண் மாயம்: அண்ணன் போலீசில் புகார்

Published On 2022-09-22 07:14 GMT   |   Update On 2022-09-22 07:14 GMT
  • அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது.
  • இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.

கடலூர்:

சிதம்பரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 36) இவர்களுக்கு திருமணம்,ஆகி9 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் ரூ.2 லட்சம் பணத்தை தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது. அதை சரண்யா எடுத்து புவனகி ரியில் உள்ள ஒரு வங்கியில் தனது பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து செந்தி ல்குமார் தனது மனைவி சரண்யாவிடம் கேட்ட போது, இருவருக்கும் இடையில்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதனால் சரண்யா கணவர் செந்தில்குமாரிடம் கோபித்துக் கொண்டு தனது 9 வயது குழந்தையுடன் புவனகிரியில் உள்ள  அண்ணன்உத்தண்டி என்பவரது வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் வெளியே சென்றசரண்யாவை காணவில்லை. இதுகுறித்து அவரதுஅண்ணன் உத்தண்டிபுவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் சென்ற சரண்யா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து தேடி வருகி ன்றனர். 

Tags:    

Similar News