உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே கடைக்கு சென்ற இளம் பெண் மாயம்

Published On 2022-08-17 07:43 GMT   |   Update On 2022-08-17 07:43 GMT
  • சிதம்பரம் அருகே கடைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்.
  • மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

சிதம்பரம் அருகே வ..உசி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 18) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் விஜயலட்சுமி பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயலட்சுமி தாய் பொன்மணி சிதம்பரம் நகர தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News