உள்ளூர் செய்திகள்
மாயமான பிரியங்கா.
பண்ருட்டியில் பட்டதாரி இளம்பெண் மாயம்
- பண்ருட்டியில் பட்டதாரி இளம்பெண் மாயமானார்.
- படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர், வடலூரி ல் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 26-ந் தேதி இரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.