உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவி மாயம்

Published On 2022-09-16 08:03 GMT   |   Update On 2022-09-16 08:03 GMT
  • திருநாவலூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவி மாயமானார்.
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவியை தேடி வருகிறார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருவண்ணாமலை அருகே குண்ணத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் அலமேலு இவர்களின் மகள். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாணவியை முருகன் மற்றும் அலமேலு பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் இங்கு தெரியும் கிடைக்கவில்லை இது குறித்து திருநாவலூர் போலீசில் தாய் அலமேலு புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவியை தேடி வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சரண்ராஜ் (22) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News