உள்ளூர் செய்திகள்

மதுக்கரையில் கல்லூரி மாணவரை பீர்பாட்டிலால் தாக்கிய மர்மநபர்கள்

Published On 2022-08-01 09:39 GMT   |   Update On 2022-08-01 09:39 GMT
  • தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
  • மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் சரவணகுமாரை சரமாரியாக தாக்கினர்.

கோவை:

தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சரவணகுமார். இவர் கோவை மதுக்கரையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் தங்கி தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து சீராபாளையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்தனர். அவர்களிடம் எதற்காக என்னை மறிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மர்மநபர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் சரவணகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து சரவணகுமாரின் தந்தை செல்வராஜ் கோவை வந்து, மதுக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை தாக்கியவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக தாக்கினார்கள் ? முன்விரோதத்தில் தாக்கினரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News