உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சுற்றுலா தலங்கள் அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு

Published On 2023-03-22 14:49 IST   |   Update On 2023-03-22 14:49:00 IST
சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரவேணு,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் கக்குளா பகுதியில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டனர்.

அருகில் அரசு துறை அலுவலர்கள் குன்னூர் கோட்டாட்சியர் பூசனகுமார், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, நடுஹட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் போஜன், காவிலேரைபீமன் உடன் இருந்தனர். பின்னர் கோத்தகிரி நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News