உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய காட்சி.

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்- முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பங்கேற்பு

Published On 2023-01-24 09:15 GMT   |   Update On 2023-01-24 09:15 GMT
  • தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
  • எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடும் முழுதகுதி படைத்தவர்கள் நாம்தான் என்று சண்முகநாதன் பேசினார்.

தூத்துக்குடி:

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மைதானத்தில் நடந்தது. மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றி செல்வன், முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சேவியர் வரவேற்றார்.

தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடும் முழுதகுதி படைத்தவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ள நாம்தான்.

எம்.ஜி.ஆர். செய்த நல்ல திட்டங்களாலும், நல்ல ஆட்சியினாலும், அவரது ஆட்சியை தருவேன் என்றே இன்றைய கால அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர், சார்பு அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், நடராஜன், டேக்ராஜா, தனராஜ், பிரபாகர், அருண்ஜெபக்குமார், பில்லா விக்னேஷ், சுதர்சன்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News